இஸ்கான் சார்பில் நாளை கிருஷ்ண ஜயந்தி விழா

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
"இஸ்கான்' அமைப்பு சார்பில் இரவு 7 மணி அளவில் இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் பாடல் மற்றும் பஜனை நிகழ்ச்சியும் 9 மணிக்கு அஜமிலா-பாகவத புராண நாடகமும் நடைபெற இருக்கிறது. இரவு 10.30 மணி முதல் சிறப்பு அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி இஸ்கான் அமைப்பின் தலைமை ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் அவதாரத் திருநாள் "நந்தோத்சவம்' எனும் பெயரில் கொண்டாடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com