சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
"இஸ்கான்' அமைப்பு சார்பில் இரவு 7 மணி அளவில் இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் பாடல் மற்றும் பஜனை நிகழ்ச்சியும் 9 மணிக்கு அஜமிலா-பாகவத புராண நாடகமும் நடைபெற இருக்கிறது. இரவு 10.30 மணி முதல் சிறப்பு அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி இஸ்கான் அமைப்பின் தலைமை ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் அவதாரத் திருநாள் "நந்தோத்சவம்' எனும் பெயரில் கொண்டாடப்பட உள்ளது.