சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் ஓர் அங்கமான எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர் எஸ்.ஆர். கோவிந்தராஜனின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.
கல்வியாளர், ஆசிரியர், இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்ட எஸ்.ஆர்.கோவிந்தராஜன் இயற்பியலில் மிகச்சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். இவருக்கு தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரது நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, சமுக ஆர்வலர் ராமகிருஷ்ண ராஜா, டி.ஜி.வைஷ்ணவ கல்லூரிச் செயலாளர் பி.ஹரிதாஸ், பேராசிரியர்கள் எஸ்.பி.ராஜகோபால், டி.பி.சங்கரன், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், ஜி.சுந்தரராஜன் ஆகியோர் பேராசிரியர் எஸ்.ஆர்.கோவிந்தராஜனின் சேவைகளை நினைவுகூர்ந்தனர்.