சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் கடந்த 4 நாள்களில் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பத்மராஜன், எம்.எஸ்.ராஜேந்திரன், அக்னி ராமச்சந்திரன், அகமது ஷாஜகான், நடராஜன் ஆகிய 5 பேரும், புதன்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைகோட்டுதயம், இந்திய குடியரசுக் கட்சி சார்பில் டி.ரவிபறையனார் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வியாழக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் ரமேஷ்பாபு (52), நரேஷ் (48) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.