அன்புச்செழியன் முன்ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. நடிகர் சசிகுமாரின் உறவினரும் சினிமா இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்ட நிலையில், அன்புச்செழியன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com