சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கேரளாவைச் சேர்ந்த சுப்பிரமணிய பிரசாத் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்களாக பணியாற்றி வரும் 9 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பட்டியலில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக உள்ள சுப்பிரமணிய பிரசாத்தும் இடம்பெற்றிருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவரது நியமன பரிந்துரையை குடியரசுத்தலைவர் திரும்ப பெறக் கோரியும், அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதியாக நியமிக்க வலியுறுத்தியும் 50}க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்ற வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.