ஏர் இந்தியா தலைவராக பிரதீப் சிங் கரோலா பொறுப்பேற்பு

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ பொறுப்பேற்றார்.

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ பொறுப்பேற்றார்.
முந்தைய தலைவரான ராஜீவ் பன்சால் பதவி விலகியதை அடுத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சிங் கரோலோ இப்பதவியை ஏற்றுள்ளார். பிரதீப் சிங் கரோலா 1985-ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். 
2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் 
இருந்தவர். அதுமட்டுமின்றி கர்நாடக அரசில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 
கர்நாடக மாநில அரசின் நகர்ப்புற உள் கட்டமைப்பு மற்றும் நிதி நிர்வாகத் துறையின் தலைவராக இருந்தவர். கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com