பொங்கல் பொருள்கள்: இன்று முதல் விநியோகம்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் விலையில்லா பொங்கல் பொருள்கள் திங்கள்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் விலையில்லா பொங்கல் பொருள்கள் திங்கள்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
தைப்பொங்கலை ஒட்டி இலவச பொருள்களை ஆண்டுதோறும் தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. அதேபோல், இந்தாண்டுக்கான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி-திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புதுண்டு ஆகியவைகள் கொண்ட பொட்டலமாக வழங்கப்படவுள்ளன.
ஏற்கெனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஒவ்வொரு நியாய விலைக் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பொருள்களை பொட்டலமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் அரிசி, சர்க்கரை மட்டுமே தயாராக உள்ளது. மற்ற பொருள்களான முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளும் வகையில் நிதியும் வழங்கியுள்ளது. இதுவரையில் தரமான கரும்புகள் கிடைக்காத நிலையே உள்ளது. அதனால், அதுவும் குறிப்பிட்ட நாளுக்குள் வாங்கி அனைத்து பொருள்களும் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் வேட்டி, சேலையும் வருவாய்த் துறை அதிகாரிகளால் நியாய விலைக்கடைகளிலேயே திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 34,686 நியாய விலை கடைகளைச் சேர்ந்த 1.8 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com