மாணவியிடம் வழிப்பறி செய்ததாக, இளைஞர் பிடிபட்டார்.
போரூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் லாவண்யா (20). இவர் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர் வேளச்சேரி பிரதான சாலையில் ப்ளூ கிராஸ் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடந்து வந்தபோது, அவர் வைத்திருந்த பணப்பையையும், செல்லிடப்பேசியையும் இளைஞர் பறித்து சென்றார்.
அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கிண்டி கன்னிகாபுரம் 1-ஆவது தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவசக்தி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.