சென்னை மாரத்தான்: ராணுவ வீராங்கனை சிறப்பிடம்

சென்னை மாரத்தான் நெடுந்தொடர் ஓட்டப் போட்டியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியைச் சேர்ந்த வீராங்கனை தான்யா ஷெர்கில் சிறப்பிடம் பெற்றார்.

சென்னை மாரத்தான் நெடுந்தொடர் ஓட்டப் போட்டியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியைச் சேர்ந்த வீராங்கனை தான்யா ஷெர்கில் சிறப்பிடம் பெற்றார்.
3 பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியைச் சேர்ந்த 11 அதிகாரிகள், 13 ராணுவ வீரர்கள், 16 பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் 10 கி.மீ. தூர போட்டியில் தான்யா ஷெர்கில் 5-ஆவது இடம் பிடித்தார்.
இவர் 48 நிமிஷங்கள் 38 விநாடியில் 10 கி.மீ. தொலைவைக் கடந்தார். 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் அகாதெமியில் இணைந்த இவர், சிறந்த விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com