சென்னை புழல் சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதியை போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற சின்னய்யா (38) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் மத்திய சிறையில் உள்ளார். ஜெயராஜ் உள்பட 7 கைதிகள் சிறைக்கு வெளியே உள்ள தோட்ட வேலைக்கு வியாழக்கிழமை காலை சென்றனர். அப்போது அங்கிருந்து ஜெயராஜ் தப்பியோடிவிட்டார்.
சிறை நிர்வாகத்தினர் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜெயராஜின் வீடு இருக்கும் பகுதியில் போலீஸார் மாறு வேடத்தில் முகாமிட்டிருந்தனர்
இந்நிலையில் ஜெயராஜ் வியாழக்கிழமை நள்ளிரவு மதுபோதையில் தள்ளாடியபடி , வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டை நோக்கி நடந்து வந்தபோது கைது செய்யப்பட்டார்.