சாலை விதி மீறல்: 8,259 பேர் மீது வழக்கு

சென்னையில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8,259 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.13.38 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8,259 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.13.38 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 25}ஆம் தேதி முதல் ஜூலை 1}ஆம் தேதி வரை சென்னையின் பல இடங்களிலும் நடைபெற்ற சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 494 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 3,720 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 2,346 பேர் மீதும், தாறுமாறாக வாகனம் ஓட்டியதாக 355 பேர் மீதும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 1,103 பேர் மீதும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 241 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 8,259 பேர் மீது போக்குவரத்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அபராதமாக ரூ.13.38 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com