இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.எஸ்.ரங்கராஜனுக்கு சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை.24) மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
டி.எஸ்.ரங்கராஜனின் 79}ஆவது பிறந்தநாளை முன்னிட்டும் அவர் 52 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையாற்றி வருவதையொட்டியும் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் வட சென்னை பகுதி அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்துகின்றனர்.