இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தந்தை- மகன் கைது

சென்னை குன்றத்தூர் பகுதியில் இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தந்தையையும் மகனையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை குன்றத்தூர் பகுதியில் இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தந்தையையும் மகனையும் போலீஸார் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை குன்றத்தூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (27), இவர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி குன்றத்தூர், பாலவராயன் குளக்கரை தெரு அருகில் உள்ள கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் தனது நண்பர் ராமச்சந்திரனை சந்திப்பதற்கு, கல்குவாரியின் நுழைவு வாயிலை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மாடுகள் உள்ளே நுழைந்து கல்குவாரியின் உரிமையாளர் வேலாயுதம் என்பவரின் வாழைத் தோட்டத்தில் மேய்ந்து வாழையை சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேலாயுதம் மற்றும் அவரது மகன் செல்லத்துரை ஆகிய இருவரும் சுந்தரேசனை கண்டித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை மகன், இருவரும் சேர்ந்து மண்வெட்டி மற்றும் உருட்டுக்கட்டையால் சுந்தரேசனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுந்தரேசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வேலாயுதம் (57), செல்லதுரை (29) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com