பெண்களிடம் சங்கிலி பறிப்பு: சந்தேக நபர்கள் புகைப்படம் வெளியீடு

சென்னை திருமங்கலம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றபோது சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேக நபர்களின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை திருமங்கலம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றபோது சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேக நபர்களின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:-
சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அன்னை பிளாட்ஸ், வள்ளலார் குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி காலை நடந்து சென்ற பெண்கள் இருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் சந்தேக நபர்களின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கீழ்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் திருமங்கலம் சரக உதவி ஆணையரை 99400 55155 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரை 99403 22999 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மயிலாப்பூர்: இதேபோன்று, மயிலாப்பூர் பகுதியில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அடுத்தடுத்து நான்கு பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். அவர்களது புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 9498133566 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சிவமணிக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com