டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் நகைகள் திருட்டு

சென்னை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்த அருண்குமார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வெள்ளிக்கிழமை அருண்குமார் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அருண்குமார் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com