ரௌடி கொலை வழக்கில் நால்வர் கைது

சென்னை வேளச்சேரியில் ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியில் ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொன்சன்னியாசி (24). இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சன்னியாசி புதன்கிழமை மாலை வேளச்சேரி பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த கும்பல் சன்னியாசியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியது. வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (31), மணிவேல் (25), செல்வம் (28), மணிகண்டன் (25) ஆகி 4 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com