எழும்பூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு தாற்காலிக மூடல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) பராமரிப்புப் பணிகள் காரணமாக தாற்காலிகமாக மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) பராமரிப்புப் பணிகள் காரணமாக தாற்காலிகமாக மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 மற்றும் 6 ஆவது நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரும் படிக்கட்டுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஜூன் 19 முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின் ஜூன் 29 -ஆம் தேதி பயணிகள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com