சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) பராமரிப்புப் பணிகள் காரணமாக தாற்காலிகமாக மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 மற்றும் 6 ஆவது நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரும் படிக்கட்டுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஜூன் 19 முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின் ஜூன் 29 -ஆம் தேதி பயணிகள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.