சென்னை
அண்ணாசாலை தலைமை அஞ்சலகம்: ஜூலை 12-இல் குறைதீர்ப்பு முகாம்
அஞ்சல் துறையின் சென்னை மண்டல அளவிலான குறை தீர்ப்பு முகாம் ஜூலை 12 ஆம் தேதி (புதன்கிழமை) 11.30 மணியளவில்
அஞ்சல் துறையின் சென்னை மண்டல அளவிலான குறை தீர்ப்பு முகாம் ஜூலை 12 ஆம் தேதி (புதன்கிழமை) 11.30 மணியளவில் அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு வட்டம் பொது தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வாடிக்கையாளர்கள் சென்னை தலைமை அஞ்சல் அலுவலகம் தொடர்பான குறைகளை ஜூலை 3 ஆம் தேதிக்குள், அஞ்சலக துணை இயக்குநர் எஸ்.வாசுதேவனுக்கு அனுப்பலாம். அல்லது pg.tn@indiapost.gov.in எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு முகாம் எனும் தலைப்பில் குறைகளை அனுப்பி வைக்கலாம் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.