வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 23 இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்த விவரம்: மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி ஜூன் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா, தேங்காய் பொடி, கறிவேப்பிலை பொடி, எள்ளுப்பொடி, சிக்கன், மீன் மசாலாப் பொடிகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் முறை குறித்து கற்றுத்தரப்படவுள்ளன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.