இரண்டாண்டு பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. வரும் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.
2017 -18 கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1,707 பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்த உள்ளது.
சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. வரும் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 3 -ஆம் தேதிக்குள் "செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-18, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.