தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் செவ்வாய்க்கிழமை மாலை முழுவதுமாக இடிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகங்கள் சிக்கியிருந்தன. 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கட்டடக் கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அதில் 2 பாதுகாப்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டன.
ஒரு பெட்டகம் வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், கருகிய நிலையில் பத்திரங்கள் இருந்தன. இதையடுத்து, மற்றொரு பெட்டகத்தில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருப்பதாகத் தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ. 20 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் பெட்டகம் இன்னும் திறக்கப்படவில்லை.