பாலத்திலிருந்து கீழே விழுந்த கார்; சுற்றுலாப் பயணி சாவு: 4 பேர் காயம்

சென்னை பாரிமுனை அருகே சுரங்க மேம்பாலத்திலிருந்து கார் கீழே விழுந்த விபத்தில் இலங்கையிலிருந்து சுற்றலா வந்த பெண் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை பாரிமுனை அருகே சுரங்க மேம்பாலத்திலிருந்து கார் கீழே விழுந்த விபத்தில் இலங்கையிலிருந்து சுற்றலா வந்த பெண் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: இலங்கையைச் சேர்ந்த பெண் ரெத்ரியா(59). இவர் தனது மகன்கள் அப்துல், அஷ்ராக், மருமகள் நஸ்ரியா ஆகியோருடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார்.
இவர்கள் பாரிமுனை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரெத்ரியா தனது குடும்பத்துடன் பொருள்கள் வாங்குவதற்காக தியாகராய நகருக்குச் சென்று விட்டு மாலை 5 மணியளவில் வாடகைக் கார் மூலம் பாரிமுனைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். காரை ஓட்டுநர் மாதேஸ்வரன் ஓட்டினார்.
அந்தக் கார் பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்க மேம்பாலத்தில் வரும்போது திடீரென நிலைதடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்தவர்களில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைப் பற்றிய விவரம் உடனடியாகத் தெரியவில்லை. திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com