ஏ.சி.யில் தீப் பிடித்து விபத்து: பாரதிய ஜனதா நிர்வாகி சாவு

சென்னை வில்லிவாக்கத்தில் ஏ.சி. தீப் பிடித்து விபத்து ஏற்பட்டதில் தூங்கிக் கொண்டிருந்த பாரதிய ஜனதா நிர்வாகி தீக் காயமடைந்து இறந்தார்.
ஏ.சி.யில் தீப் பிடித்து விபத்து: பாரதிய ஜனதா நிர்வாகி சாவு

சென்னை வில்லிவாக்கத்தில் ஏ.சி. தீப் பிடித்து விபத்து ஏற்பட்டதில் தூங்கிக் கொண்டிருந்த பாரதிய ஜனதா நிர்வாகி தீக் காயமடைந்து இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்திராஜ் (52). டிராவல்ஸ் உரிமையாளர். பாஜகவின் அந்தப் பகுதி நிர்வாகியாக உள்ளார். அவரது மனைவி சங்கீதா. அனிதா லட்சுமி, அட்சயா என இரு மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் முதல் தளத்தில் உள்ள தனது படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த அறையில் இருந்து கடுமையாக புகை வெளியேறியது. இதையடுத்து அவரது அறைக்கதவை குடும்பத்தினர் உடைத்தனர். காந்திராஜ் உடலில் தீ காயத்துடன் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
பலத்த காயமடைந்த காந்திராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நண்பகல் இறந்தார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். சம்பவம் நடந்த அறையில் இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காந்திராஜ் தூக்கத்தில் இருந்ததால் அந்த அறையில் தீப் பிடித்தது தெரியவில்லை. அறை முழுவதும் தீ பரவிய பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்த காந்திராஜ் அங்கிருந்து தப்ப முயன்றபோது தீப் பிடித்ததில், பலத்த காயமடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com