பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வை 439 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 475 முதல் 495 மதிப்பெண்களை 70 மாணவர்கள் எடுத்துள்ளனர்.
மேலும், வெவ்வேறு பாடங்களில் 112 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல், 450 மதிப்பெண்களுக்கு மேல் 164 பேர், 425 மதிப்பெண்களுக்கு மேல் 236 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 308 பேர் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளி தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ, மாணவிகளை பள்ளியின் உயர் அதிகாரி மகேஸ்வரி, பள்ளியின் முதுநிலை முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி, துணை முதல்வர் நிலவரசி ஆகியோர் பாராட்டினர்.