மாடியின் ஒரு பகுதி சரிந்து அண்ணன்-தம்பி சாவு

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 8 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி உயிரிழந்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 8 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சின்னமலை பகுதியில், அண்ணா சாலையில் தனியார் மருத்துவமனைக்கு 8 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கட்டடத்தின் 6 -ஆவது தளத்தில் 'ஹலோ பிளாக்' கற்களை அடுக்கும் பணியில் சில தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளையில், தரைத்தளத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல், ஜல்லி கற்களை அகற்றும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 -ஆவது தளத்தில் இருந்து ஹலோ பிளாக் கற்கள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் சில கற்கள், தொழிலாளர்கள் பிருந்தாவன் (24), அவரது சகோதரர் சதாசிவா (19), ஆந்திரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (37) ஆகியோர் மீது விழுந்தன. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்தில் பிருந்தாவனும், சதாசிவாவும் அடுத்தடுத்து இறந்தனர். பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com