பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மடிப்பாக்கம் ஹோலி பிரின்ஸ் பள்ளியில் 50 சதவீத மாணவ-மாணவிகள் 450-க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவி ஸ்ருதிகா 496, மாணவன் லோகேஷ் 492, மாணவன் மனுகிருஷ்ணா 491 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 10 மாணவர்கள் 485-க்கு மேலும் 50 சதவீத மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பழனிவேல் ராமசாமி தெரிவித்தார்.