அம்பத்தூரில் மதுக்கடைகளை மூடக் கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
அம்பத்தூர் டயர் தொழிற்சாலை எதிரே கடந்த 19-ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர். இது 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.உண்ணாவிரதத்தில், பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் பொதுநலச் சங்கத்தினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.