சிறுமி கொலை: பக்கத்து வீட்டு பெண் கைது

வில்லிவாக்கம் பகுதியில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வில்லிவாக்கம் பகுதியில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி வெங்கடேஷ் (27). இவரது மனைவி ஜெயந்தி (23). வீட்டில் இருந்த இவர்களின் 4 வயது மகள் காவ்யா செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் காணாமல் போனதை அடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
 இந்நிலையில், புதன்கிழமை காலை ஜெயந்தி வீட்டின் அருகே உள்ள புதரில் காவ்யாவின் சடலம் கிடந்தது. சிறுமியின் வாயில் நுரையும், கன்னங்களில் காயங்களும் காணப்பட்டன. காவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அச்சிறுமி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 போலீஸார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவி (32) காழ்ப்புணர்வு காரணமாக காவ்யாவை கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
 ஜெயந்திக்கும், தேவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த தேவி, சிறுமி காவ்யாவை வீட்டின் பக்கெட் தண்ணீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு, சடலத்தை சேலையில் சுற்றி புதரில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com