தம்மைச் சந்திக்க வருவோரும், விழா ஏற்பாட்டாளர்களும் சால்வை, மலர்க் கொத்துகளைத் தவிர்க்க வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்வோரும், என்னைச் சந்திக்க வருவோரும் மலர்க் கொத்து மற்றும் சால்வைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனை உடனடியாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.