இளைஞர் கொலை வழக்கு: இருவர் கைது

சென்னை, கோயம்பேட்டில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கோயம்பேட்டில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கோயம்பேடு, தெற்குமாட வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (27). இவர், உறவினர் பழனிச்சாமியுடன் தங்கியிருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் தள்ளுவண்டியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13 -ஆம் தேதி, சசிகுமார் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், சென்னை அயன்புரம் சி.கே.சுந்தரம் தெருவைச் சேர்ந்த டேவிட் (21), மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள சட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் (22) ஆகிய இருவரும்தான் சசிகுமாரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
என்ன காரணம்?: சிவபெருமாள் மனைவி சரண்யா கணவரை விட்டு பிரிந்து, கோயம்பேடு மெட்டுகுளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், அவருக்கும், சசிகுமாரின் மாமா பழனிசாமிக்கும் இடை தவறான உறவு ஏற்பட்டதாம். இது சிவபெருமாளுக்கு அண்மையில் தெரி யவந்துள்ளது. அதனால், சிவபெருமாள், தனது உறவினர் டேவிட்டுடன் இணைந்து பழனிச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று பழனிசாமி வீட்டுக்குச் சென்றபோது அங்கு பழனிசாமி இல்லை.
அங்கிருந்த சசிகுமாரிடம் வாக்குவாதம் செய்தபோது தகராறு முற்றிய நிலையில், சசிகுமாரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com