சென்னை வேளச்சேரியில் திருட்டில் ஈடுபட்டவர், பொதுமக்களிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேளச்சேரி நியூகாலனி அம்பேத்கர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருடும் நோக்கத்துடன் கடந்த 6-இல் பூட்டை மர்ம நபர் உடைத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் சத்தம் போட்டு விரட்டினர்.
திருட முயற்சித்தவர் மாடிப்படியில் தடுமாறிக் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இது தொடர்பாக தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அந்த நபர் வியாழக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் இறந்தார். அவரைப் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.