சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் திருடிய வழக்கில், 5 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவர் பு.உக்கம்ராஜ். இவர் பத்து நாள்களுக்கு முன் தனது நகைப் பட்டறையில் மேற்பார்வையாளராக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷிடம் 8 கிலோ தங்கத்தைக் கொடுத்து, குறிப்பிட்ட சில நகைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆனால், அந்த தங்கத்தை ராஜேஷும் அங்கு பணிபுரியும் மேலும் 5 ஊழியர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
உக்கம்ராஜ் புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜேஷின் கூட்டாளிகளான விழுப்புரத்தைச் சேர்ந்த சங்கர், செந்தில், விஜய், சென்னை சரத்குமார், குருதரண் ஆகிய 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்கத்தை போலீஸார் கைப்பற்றினர். தலைமறைவாக இருக்கும் ராஜேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.