8 கிலோ தங்கம் திருடிய வழக்கு: 5 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் திருடிய வழக்கில், 5 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் திருடிய வழக்கில், 5 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவர் பு.உக்கம்ராஜ். இவர் பத்து நாள்களுக்கு முன் தனது நகைப் பட்டறையில் மேற்பார்வையாளராக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷிடம் 8 கிலோ தங்கத்தைக் கொடுத்து, குறிப்பிட்ட சில நகைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார். 
ஆனால், அந்த தங்கத்தை ராஜேஷும் அங்கு பணிபுரியும் மேலும் 5 ஊழியர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
உக்கம்ராஜ் புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களைத் தேடி வந்தனர். 
இந்நிலையில், ராஜேஷின் கூட்டாளிகளான விழுப்புரத்தைச் சேர்ந்த சங்கர், செந்தில், விஜய், சென்னை சரத்குமார், குருதரண் ஆகிய 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்கத்தை போலீஸார் கைப்பற்றினர். தலைமறைவாக இருக்கும் ராஜேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com