ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்:அக்.16-க்குள் குறைகளை அனுப்பலாம்

ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 8-ஆவது தளத்தில் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 8-ஆவது தளத்தில் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால் அதை விண்ணப்பம் மூலமாக தெரிவிக்கலாம்.
அதில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண், கடைசியாகப் பணிபுரிந்த அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரங்கள், கோரிக்கை நிலுவையில் உள்ள அலுவலகம் (முழு முகவரியுடன்) ஆகியவற்றை குறிப்பிட்டு 'மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எண் 62, ராஜாஜி சாலை, சென்னை- 600001' என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com