சென்னை தாம்பரத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு ù தரிவித்தும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும், தாம்பரம் நகர பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசியது:
நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் மத்திய அரசையும், பாஜகவையும் எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தப் போராட்டம் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் மாற்று சக்தியாக திமுக திகழவே முடியாது. நவோதயா பள்ளிகளின் அவசியத்தை தமிழக மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
தமிழகமெங்கும் நவோதயா பள்ளிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், தாம்பரம் தொகுதி சட்டப்பேரவை பொறுப்பாளர் பொற்றாமரை சங்கரன், பிற மாநில பிரிவு தலைவர் அசோக் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.