இந்திய விதை தொழில்நுட்பச் சங்கத்தின் துணைத் தலைவராக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: இந்தச் சங்கம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, அதிக விளைச்சலைத் தரக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, விதை அறிவியல் மற்றும் பண்ணை விவசாயத் துறைகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தேசிய அளவில் செயல்படும் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் பாஸ்கரன், 2020 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.