சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி இடையே அதிவிரைவு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 02842: செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 11.30 மணிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள சாந்த்ராகச்சி சென்றடையும்.
இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விசாகப்பட்டினம், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பாத்ராக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.