அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, வரும் 14 -ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அம்பேத்கரின் 128 -ஆவது பிறந்த தினம் வரும் 14 -ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை ஆற்காடு சாலையில் உள்ள அவரது சிலைக்கு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.