காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர்களில் பலரும் கருப்புப் பட்டையுடன் செவ்வாய்க்கிழமை பணியாற்றினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வு காண்பதை வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் சார்பில், கருப்புப் பட்டையுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஊழியர்களில் பலரும் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டையை அணிந்து கொண்டு பணியாற்றினர். இதேபோன்று, சட்டப் பேரவைச்
செயலகப் பணியாளர்கள் சிலரும் இதேபோன்று கருப்புப் பட்டையுடன் பணிபுரிந்தனர்.