சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை சார்பில் கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில் பாம்பு, பல்லி, முதலை உள்ளிட்ட ஊர்வன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோடைகாலப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு சென்னை பாம்புப் பண்ணைத் தலைவர் எஸ்.சுப்பராயலு தலைமை வகித்தார். நிர்வாகச் செயலர் எஸ்.பால்ராஜ் முன்னிலை வகித்தார். சென்னை இயற்கை அமைப்பு தலைவர் கே.வி.சுதாகர் முகாமை தொடங்கி வைத்தார்.
ஊர்வனவற்றின் தன்மைகள், அவற்றால் ஏற்படும் நன்மைகள், பாம்பு கடித்தால் கொடுக்கப்பட வேண்டிய முதலுதவி குறித்து பொதுமக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மே 25-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ஒரு குழு வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.