மீன் வியாபாரி வெட்டிக் கொலை

சென்னை, மேடவாக்கத்தில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை, மேடவாக்கத்தில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேடவாக்கம் காந்திநகர் செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (52), மனைவி மீனா (40). இத்தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சீனிவாசன் அங்கு மீன் வியாபாரம் செய்து வந்தார். சீனிவாசன் திங்கள்கிழமை காலை மேடவாக்கம் கூட்டுச் சாலையில் உள்ள டீக்கடைக்குச் சென்று வீடு திரும்பும்போது அங்கிருந்த சிலர் சீனிவாசனிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உயிரிழந்தார். 
பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com