குடிநீர்-கழிவுநீர் இணைப்புப் பெற மதுரவாயலில் நாளை சிறப்பு முகாம்

குடிநீர், கழிவுநீர் இணைப்புப் பெற மதுரவாயலில் சனிக்கிழமை (ஏப்.21) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிநீர், கழிவுநீர் இணைப்புப் பெற மதுரவாயலில் சனிக்கிழமை (ஏப்.21) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மதுரவாயல், நொளம்பூர் பணிமனை 143, 144, 146, 147 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டமும், நொளம்பூர், காரம்பாக்கம் 143, 150-ஆவது வார்டுகளில் குடிநீர் திட்டமும் முடிக்கப்பட்டுள்ளது. 
தற்போது சென்னை குடிநீர் வாரியம் வீடுகளுக்கான இணைப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக 'பணிமனை 144, 5-ஆவது பிளாக், எம்எம்டிஏ காலனி, மதுரவாயல், சென்னை-95 என்ற முகவரியில் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து 81449 30146, 81449 30147, 81449 30240, 81449 30911 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com