புழல் சிறையில் இருந்து மேலும் ஒரு ஆயுள் கைதி விடுதலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, புழல் சிறையில் இருந்து 11-ஆவது கட்டமாக ஒரு கைதி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, புழல் சிறையில் இருந்து 11-ஆவது கட்டமாக ஒரு கைதி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறையில் நன்னடத்தையுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 
அதன்படி இதுவரை 10 கட்டங்களாக இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 11-ஆவது கட்டமாக, குணா என்கிற குணசேகரனை சனிக்கிழமை விடுதலை செய்தனர். இவரை உறவினர்கள் சிறைவாயிலில் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com