சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவையொட்டி, 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வன மரபியல் வள மரப் பூங்கா திறப்பு விழா, தமிழ்நாடு வன ஆராய்ச்சிப் பிரிவின் 100 -ஆவது ஆண்டு விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த விழாவில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.