கேரள வெள்ள பாதிப்பு: வருமான வரி அதிகாரி ரூ.1 லட்சம் நிவாரண நிதி

கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்காக, தமிழ்நாடு -புதுச்சேரிக்கான வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுஷில் குமார் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை தலைமை அலுவலக வளாகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றும் தமிழ்நாடு - புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுஷில் குமார்.
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை தலைமை அலுவலக வளாகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றும் தமிழ்நாடு - புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுஷில் குமார்.


கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்காக, தமிழ்நாடு -புதுச்சேரிக்கான வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுஷில் குமார் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை தலைமை அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவர் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் தனது உரையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்' என்றார் அவர். இதையடுத்து அவர், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். விழாவில் வருமான வரித் துறை ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com