சுதந்திர தினம்: திருநங்கைகளுக்கு கடனுதவி

பெருநகர சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், திருநங்கைகள் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடனுதவி அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சுயதொழில் செய்வதற்காக மகளிர் சுயஉதவிக்குழு திருநங்கைகளுக்கு ரூ.1.20 லட்சம் வங்கிக் கடனுக்கான காசோலை வழங்கிய மாநகராட்சி ஆணையர் 
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சுயதொழில் செய்வதற்காக மகளிர் சுயஉதவிக்குழு திருநங்கைகளுக்கு ரூ.1.20 லட்சம் வங்கிக் கடனுக்கான காசோலை வழங்கிய மாநகராட்சி ஆணையர் 


பெருநகர சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், திருநங்கைகள் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடனுதவி அளிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, தேசிய மாணவர் படை, சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்: தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலம், 3-ஆவது வார்டில் திருநங்கைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாதா மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனாக ரூ.1.20 லட்சத்துக்கான காசோலையையும், தனிநபர் சுயதொழில் புரிந்திடும் வகையில் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆணையர் வழங்கினார்.
துணை ஆணையர்கள் எம்.கோவிந்த ராவ், மகேஸ்வரி ரவிக்குமார், பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com