பொது விடுமுறை காரணமாக, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், பாலூட்டி இனங்கள் 455, பறவை இனங்கள் 1,433, பாம்பு, முதலை, பல்லி இனங்கள் 424 என மொத்தம் 2,302 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளதால், வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருக்கும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.