எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் இறுதிக் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21 முதல் 23 வரை... : அரசு மருத்துவக் கல்லூரிகள், தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வு அட்டவணை  www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com