ஈஞ்சம்பாக்கத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சோழிங்கநல்லூர் பகுதி 15- க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடைபெற்றது. பணிமனை 196 (ஈஞ்சம்பாக்கம், பணிமனை 193 (ஒக்கியம் துரைப்பாக்கம்), பணிமனை 192 (நீலாங்கரை) ஆகிய பகுதிகளில் பணி நிறைவடைந்தது. 
இதை தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் சென்னை குடிநீர் வாரியம் தலைமை அலுவலகத்திலுள்ள பதிவு பிரிவு மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, குடிநீர் இணைப்புக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 
மேலும், ஏற்கெனவே உள்ள குடிநீர் இணைப்புகளை புதிய குடிநீர்குழாய்களில் மாற்றுவதற்கு குடிநீர், கழிவுநீர் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி இணைப்பினை புதுப்பித்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
இடைத்தரகர்களை அணுகாதீர்... புதிய குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். குடிநீர் வாரியத்துக்கு தொடர்பற்ற வெளியாள்கள் அல்லது இடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம். 
இதுதொடர்பான விவரங்களுக்கு, துணை பகுதி பொறியாளர் 8144930252, 8144930340; உதவி பொறியாளர் பணிமனை (192)---8144930192, உதவி பொறியாளர் பணிமனை 193-------8144930193, உதவி பொறியாளர் பணிமனை 196------ 8144930196 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com