பட்டாபிராம் மின் கட்டண வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஆவடிக் கோட்டம், பட்டாபிராம் உபகோட்டம் பருத்திப்பட்டு பிரிவு அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம் மனை எண். 22, 4-ஆவது குறுக்குத் தெரு, லட்சுமி நகர், கோவர்த்தனகிரி, ஆவடி என்ற முகவரியில் இருந்து மனை எண்.27/2 3-ஆவது
குறுக்குத் தெரு, லட்சுமி நகர், கோவர்த்தனகிரி, ஆவடி முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளைய மின்தடை: இதனிடையே ஆவடி காமராஜ் நகர் பகுதி, மெப்ஸ் பகுதியில் மின்பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.6) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது.
இதையடுத்து காமராஜ் நகர் பகுதியில், காமராஜ் நகர், ஆவடி, த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், மெப்ஸ் தொழிற் பூங்காப் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.