யானைக்கவுனி பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: திமுக கோரிக்கை

சென்னையில் யானைக்கவுனி பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் யானைக்கவுனி பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, நேரமில்லாத நேரத்தில் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு (திமுக) பேசியது:
யானைக்கவுனி பாலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. மேம்பாலப் பணிகளுக்கான இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை பாலப் பணிகளைத் தொடங்கவில்லை. எனவே, பணிகளை விரைந்து தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு தனது பங்கு நிதியான 50 சதவீதத்தை 
உடனடியாக ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாலப் பணிகளை விரைந்து தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com